அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை, டிச. 15-
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாடு சென்னையில் டிசம்பர் 18,19இல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாநிலத் தலைவர் மு.அன்பரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாடு சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள கே.ஆர்.சங்கரன் நினைவரங்கில் (ராமலட்சுமி பாரடைஸ்). டிசம்பர் 18,19 தேதிகளில் நடைபெற உள்ளது. 18ஆம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கும் இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். முதல் நாள் மாநாட்டை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைக்கிறார்.
19ஆம் தேதி நடைபெறும் பொது மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் ஆகியோரும் உரையாற்றுகின்றனர். மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை விளக்கிப் பேசுகிறார்